கண்டிஷன் (சிறுகதை)
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே
- நாயகன்
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வேணாமா? ஒருத்தரப் பாராட்டறதா நெனச்சுக்கிட்டு மத்தவங்கள அவமானப் படுத்தலாமா? அது அவமானம்னு உங்களுக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா அவன் முகம் போற போக்கப் பாத்தாவது புரிய வேணாமா? அப்புறம் என்ன அப்பா அம்மா?
கணேஷின் மனம் கனத்தது. கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிந்தது. துடைத்துக்கொள்ளக் கூட தோன்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
சின்ன வயசில் இருந்தே அப்படித்தான். எப்பவும் எல்லாருக்கும் சுரேஷ் தான் ஒசத்தி. அவன் சிவப்பா களையா இருக்கானாம். கணேஷ் அப்படி இல்லையாம். அதற்கு இவன் என்ன செய்யமுடியும் என்று யாரும் யோசித்தது இல்லை. யாரும் என்ன யாரும்,
பெத்த அப்பா அம்மாவே யோசிச்சது இல்லை.
பெத்த அப்பா அம்மாவே யோசிச்சது இல்லை.
கணேஷுக்கு கோவம் கோவமா வரும். பேர்ல கூட வஞ்சகம். அவனுக்கு அழகா மாடர்னா சுரேஷ். தனக்கு கர்நாடகமா கணேஷ். படிப்பில் என்னவோ இருவரும் சுட்டிதான். இருந்தாலும் பெற்றவர்களுக்கு சுரேஷின் achievements தான் எப்பவும் பெரிசு.
அவனப் பாரு படிப்புல மட்டுமில்லாம ஸ்போர்ட்ஸ் ஸ்பீச்ன்னு வெளுத்துக்கட்டறான். நீ படிச்சா மட்டும் போறுமா? வேற ஏதாவது ஸ்கில் வேண்டாமா? என்று கேட்காத நாளில்லை.
அவனப் பாரு படிப்புல மட்டுமில்லாம ஸ்போர்ட்ஸ் ஸ்பீச்ன்னு வெளுத்துக்கட்டறான். நீ படிச்சா மட்டும் போறுமா? வேற ஏதாவது ஸ்கில் வேண்டாமா? என்று கேட்காத நாளில்லை.
இவன் என்ன செய்வான்? இவனுக்கு ஏனோ ஸ்போர்ட்ஸில் ஆர்வம் வரவே இல்லை. ஆனால் படிப்பில் ஒருபோதும் சோடை போகவில்லை.
இந்தப் பிரச்சனை அதோடு முடியவில்லை. சுரேஷ் பிளஸ் டூ முடித்தவுடன் அவன் மார்க்குக்கு நல்ல காலேஜில் பொறியியல் சீட் கிடைத்தது. கையில் இருந்த பணமெல்லாம் போட்டு அவனை படிக்கவைத்தார் அப்பா. பாங்கில் லோன் வாங்கலாம் என்றால் அவரது ப்ரைவேட் கம்பெனியில் மத்யதரமான உத்தியோகம்.
கணேஷுக்கு அப்பொழுதே கேட்கவேண்டும் போலத் தோன்றியது. எல்லா பணத்தையும் இவனுக்கே செலவழித்துவிட்டால் தன் படிப்புக்கு என்ன செய்வார்கள் என்று. ஆனால் கேட்கவில்லை. தெரியும் முன்னுக்குப் பின் முரணாக பதில் வருமென்று.
ஆனால் அவன் நினைத்தபடியே ஆனது. சுரேஷ் இன்ஜினியரிங் முடித்து மேல் படிப்புக்கு வெளிநாடு செல்ல ஆசைப்பட்டான். அப்பா கையில் பணமில்லாததால் வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி அவனை யுஎஸ் அனுப்பினார்கள்.
இவனும் பிளஸ் டூ முடித்தான். இவனும் first க்ரூப் தான். ஆனால் அப்பா சொல்லிவிட்டார். இனிமேல் என்னால் முடியாது. நீ ஏதாவது நார்மல் டிகிரி படித்துக்கொள் என்று. இவன் வாய் பேசாமல் ஒரு ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்து கொண்டான். அங்குதான் ஆர்த்தியை சந்தித்தான்.
ஆர்த்தி அவன் காலேஜுக்குப் பக்கத்தில் இருந்த லேடீஸ் காலேஜில் படித்தாள். பஸ் ஸ்டாப் பழக்கம். நாளடைவில் நட்பில் முதிர்ந்தது. ஆர்த்திதான் அவனுக்குள் ஸீ ஏ படிக்கும் ஆர்வத்தையும் எண்ணத்தையும் விதைத்தாள் .
ஆனால் அதற்கான கோச்சிங் சேரக்கூட பணம் இவனிடம் இல்லை. ஆர்த்தி ஒரு கோச்சிங் சென்டரில் படித்தாள். தன்னுடைய நோட்ஸ் புக்ஸ் எல்லாம் இவனுக்குக் கொடுத்து உதவினாள். அந்த சென்டர் தந்த வீடியோ கிளாஸ் CDகளையும் பகிர்ந்து கொண்டாள்.
இருவரும் ஒரே அட்டெம்ப்டில் இன்டர் முடித்தார்கள். பிறகு ஒரு CAவிடம் ஆர்டிகல்ஷிப் சேர்ந்தார்கள். அப்போதுதான் சுரேஷுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. அங்கு இங்கு தேடி ஒரு நல்ல வரன் அமைந்தது. நல்ல குடும்பம். சற்று வசதியானவர்களும் கூட.
இரண்டு பெண்கள். இருவரும் அழகு.
இரண்டு பெண்கள். இருவரும் அழகு.
பெண் பார்க்க சென்ற இன்றைக்குத் தான் அந்த அவமானம் நேர்ந்தது. பெண்ணின் தாத்தா பெண் பார்க்கும் படலம் முடிந்தவுடன் தன் மகன் காதில் ஏதோ சொன்னார். அவர் முகம் மலர்ந்தது.
அவர் கனேஷின் அப்பாவை அழைத்து அவர் காதில் ஏதோ சொன்னார். அப்பா முகத்தில் வியப்பு. அம்மாவை அழைத்து அவள் காதிலும் ஏதோ சொன்னார். அவள் முகத்திலும் வியப்பு. ஆனால் அவன் அப்பா திடீரென்று உரத்தக் குரலில் " இதோ பாருங்க சம்பந்தி! நீங்க கேட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ். ஆனா இது நடக்காது. ஏன்னா உங்க ரெண்டாவது பொண்ணுக்கு என் ரெண்டாவது மகன் ஈடே இல்லை. அவ எத்தன அழகு! அவளுக்கு வேற இடம் பார்த்துக்குங்க" என்றார்.
கணேஷுக்கு காலடியில் இருந்து தரை நழுவியது போலிருந்தது.
இப்படியுமா பெற்றோர்கள்? அட, வேண்டாம் சாமி, சொல்றத கொஞ்சம் அமைதியா சொல்லியிருக்கலாமே! இப்படி சபையில் வைத்து அவமானப் படுத்தலாமா?
இப்படியுமா பெற்றோர்கள்? அட, வேண்டாம் சாமி, சொல்றத கொஞ்சம் அமைதியா சொல்லியிருக்கலாமே! இப்படி சபையில் வைத்து அவமானப் படுத்தலாமா?
அந்த இடத்தில் இருந்து விருட்டென்று வெளியேறினான். ஆர்த்தியை மொபைலில் கூப்பிட்டான். " கொஞ்சம் அந்த food court க்கு வரியா?" என்று கேட்கும்போதே அழுதுவிட்டான். "இதோ வர்றேன்" என்று பதறிய ஆர்த்தி சொன்னபடியே பத்து நிமிடங்களில் அங்கே வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும் கணேஷுக்கு துக்கம் அவள் கையைப் பிடித்துக்கொண்டு அழத் துவங்கினான். அவன் அழுது ஓயட்டும் என்று ஆர்த்தி நினைத்தாள்.
அழுகையினூடே கணேஷ் நடந்தவற்றை சொன்னான். ஆர்த்தி திகைத்தாள். பிறகு அவன் கண்களை பார்த்து" என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா கணேஷ்?" என்றாள்.
கணேஷ் தன் பங்குக்குத் திகைத்தான். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அவன் ஆர்த்தி பற்றி அப்படி இதுநாள் வரை நினைத்ததில்லை. இரண்டாவது சுரேஷின் மச்சினியை விடவும் ஆர்த்தி பலமடங்கு அழகானவள்.
வெகுநேரம் கணேஷ் அவளையே பார்த்தபடி இருந்தான். பிறகு மெதுவான குரலில் சொன்னான் " எனக்கு இதவிட சந்தோஷம் என்ன இருக்க முடியும் ஆர்த்தி? ஆனா ஒரு கண்டிஷன்... இல்ல இல்ல ரிக்வெஸ்ட்." என்றான்.
என்ன என்பது போல ஆர்த்தி அவனைப் பார்த்தாள்.
"நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு குழந்தைதான் பெத்துக்கணும்"
ஆர்த்தி சிரித்தபடி அவனை அணைந்தாள் .
வீயார்
No comments:
Post a Comment